districts

img

கல்குவாரி பொது ஏலம் விட கோரிக்கை

ராணிப்பேட்டை, ஆக. 14 -

      ராணிப்பேட்டை மாவட்டம், கன்னிகாபுரத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குவாரியில் கல் உடைக்கும் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறது. இந்த மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு பொது ஏலம் விட வேண்டும் என்று  கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.

     இந்த நிலையில், கல் உடைப்பவர் தொழிலாளர் ஒப்பந்த கூட்டுறவு சங்கம் சார்பில் திங்களன்று (ஆக.  14) மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நெமிலி தாலுகா கர்ணாவூர் பஞ்சாயத்து ஊர் பொதுமக்கள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்  செயலாளர் எல்.சி.மணி கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.