மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேளச்சேரி ஏரிக்கரை கிளை உறுப்பினர் சி.பாபுதாஸ் எழுதிய ‘அடையாளம்’ நூல் வெளியீட்டு விழா ஞாயிறன்று (அக்.23) தரமணியில் நடைபெற்றது. ஊடகவியலாளர் பாரதி செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் நூலை வெளியிட, தமுஎகச மாநில துணைத்தலைவர் மயிலை பாலு பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் கா.வேணி, சிபிஎம் வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி, பகுதிக்குழு உறுப்பினர் பாரதிராணி மற்றும் ஆர்.புருஷோத்தமன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.