districts

img

பி.முட்லூர் அருகே புறவழிச்சாலை பணி விரைவில் துவக்கம்

கடலூர், ஜூன் 9-

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவு நீங்கியதால், விழுப்புரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையின் சி.முட்லூர் அருகே புறவழிச்சாலை பணி விரைவில் துவங்கப்பட உள்ளது.

    விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 194 கி.மீட்டருக்கு, தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற ரூ. 6,431 கோடியில் பணி துவங்கப் பட்டுள்ளது. இதில் 180 கி.மீ., சிமெண்ட் சாலை அமைகிறது.

     விழுப்புரம் அருகே ஜானகிபுரம் கூட்டுச் சாலையிலிருந்து துவங்கும் இந்த சாலை வளவனூர், கண்ட மங்கலம், எம்.என்.குப்பம், கடலூர் நகரில் புறநகர் பகுதி வழி யாக சென்று முதுநகர் அருகே குடி காடு என்ற இடத்தில் சிதம்பரம் சாலையில் இணைகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 16 கிராமங்கள், கடலூர் மாவட்டத்தில் 61 கிராமங்கள், நாகப்பட்டிணம் மாவட்டத்தில் 43 கிராமங்கள், புதுச்சேரி மாநிலத்தில் 14 கிராமங் கள் என, 134 கிராமங்கள் வழியாக இச்சாலை செல்கிறது.

    விழுப்புரம், கடலூர், மயிலாடு துறை மாவட்டங்க ளில் தலா 1 சுங்கச்சாவடி வீதம் அமைகிறது. கட லூர் மாவட்டத்தில் கொத்தட்டை அருகே சுங்கச்சாவடி அமைக்கப்பட வுள்ளது.

   சாலை பணி நான்கு கட்டமாக பணிகள் நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் முதல் கட்டப் பணியில் 75 விழுக்காடு பணி கள் முடிந்து விட்டன. 2ம் கட்டப் பணிகள் 54 விழுக்காடும், 3ம் கட்டப் பணிகள் 61 விழுக்காடும் முடிந்துள்ளது.

   இப்பணியில், பி.முட்லூர், எம்.ஜி.ஆர்., சிலை யில் இருந்து புற வழிச்சாலை துவங்கி கீழ முங்கிலடி அருகே சிதம்பரம் சாலை யில் இணைகிறது. இப்பணிக் காக ஏற்கனவே நிலம் கையகப் படுத்தப்பட்டது.

    இதை எதிர்த்து சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். அந்த தடை உத்தரவால் தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலை பணி துவங்கப்படாமல் இருந்தது. அதனால் ஏற்கனவே செய்து வந்த சாலைப்பணியும் மந்தமானது.

    இந்நிலையில், அரசு சார்பில் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தடை உத்தரவை ரத்து செய்தனர். அதையொட்டி, ஏற்கனவே கைப்படுத்திய நிலங்கள் வழியாக புறவழிசாலை அமைக்க ஆயத்த மாகி வருகின்றனர். இப்பணிகள் இந்த ஆண்டு இறுதியில் முடிந்து போக்குவரத்து துவங்கும் என கூறப்படுகிறது.

   நாகப்பட்டினம் -விழுப்புரம் சாலைப்பணி விரைவாக நிறை வடைந்தால் புதுச்சேரி, சென்னைக்கு மிகவும் விரைவாக செல்லலாம். தற்போது நாகப்பட்டி ணத்தில் இருந்து சென்னை செல்ல 8 மணி நேரம் ஆகிறது என்றால் விரைவு சாலையால் 5 மணி நேரத்தில் செல்ல முடியும். மயி லாடுதுறை, நாகப்பட்டினம் பயணி களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.