சென்னை, ஜன.19- ஓடிஸாவின் புவனேஸ் வர் நகரைச் சேர்ந்த தருண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 10 வயது சிறுவன், தவழும் குழந்தையாக இருந்தபோது தவறுதலாக அமிலத்தை உட்கொண்டதை தொடர்ந்து காற்றுப்பாதை மற்றும் உணவு செரிமானப் பாதை யில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக அவதிப் பட்டு வந்தான். இத்தனை ஆண்டுகளாக டிரக்கியோஸ்டமி (மூச்சுக் குழாய்) குழாய் வழியாக இவன் சுவாசித்து வந்திருக் கிறான். இக்குழந்தையை குணப்படுத்துவதற்கு அனைத்து சாத்தியங்க ளையும் ஆராய்ந்து அவற்றை இக்குடும்ப உறுப் பினர்கள் செயல்படுத்தி பார்த்தபோதிலும் கூட, எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவில்லை. நாட்டின் பல்வேறு பகுதி களில் உயர்சிகிச்சை வழங்கும் பல்வேறு மருத்து வமனைகளில் கடந்த 7 ஆண்டுகள் இச்சிறுவன் 55 முறைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். பொது உணர்விழப்பு மருந்து கொடுத்து செய்யப்பட்ட அனைத்து அறுவைசிகிச்சை வழிமுறைகளும் பயனற்ற தாக இருந்தன; அதன் விளைவுகளும் இன்னும் அதிக மோசமானதாக நிலை மையை மாற்றின ஏறக்குறைய நம்பிக் கையை முழுவதுமாக இழந்துவிட்ட இக்குடும்பம், சென்னை, எம்ஜிஎம் மருத்து வமனைக்கு ஆழ்ந்த துயரத்தோடு சிறுவனை அழைத்து வந்தது. மருத்து வமனையில் தங்கியிருந்த நான்கு வார காலஅளவில் வெவ்வேறு நாட்களில் படிப்படியாக செய்யப்பட்ட அறுவைசிகிச்சை முயற்சி யானது, இச்சிறுவனுக்கு சிறப்பான விளைவுகளை பெற்றுத் தந்தது. தற்போது பிற சிறார்களைப் போலவே மூக்கின் வழியாக தாராள மாக தடையின்றி அந்த சிறு வன் சுவாசித்து வருகிறான்.