வேலூர் மாவட்டத்தில் புதிதாக 5 நகரப் பேருந்துகள், 17 புறநகர் பேருந்துகள் மற்றும் சேர்க்காடு கலைஞர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய வழித்தட பேருந்துகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் வே.ரா. சுப்புலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி. நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு.பாபு, துணை மேயர் மா. சுனில்குமார், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் விழுப்புரம் க.குணசேகரன், பொது மேலாளர் அ.கணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.