சென்னை சவுக்கார்பேட்டை பைராகி மடம் அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 4,446 சதுர அடி அளவுள்ள கட்டிடங்கள், என்எஸ்சி போஸ் சாலை மற்றும் சென்ட்ரல் முத்தையா தெருவில் உள்ளது. இந்த கட்டங்கள் 8 நபர்களுக்கு வணிக பயன்பாட்டுக்கு வாடகைக்கு விடபட்டிருந்தது. இவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்ததால் அவர்கள் மீது சட்டபிரிவு 78இன் கீழ் சென்னை மண்டலம் 1 இணை ஆணையர் முன்பு வழக்கு தொடர்ந்து, அதன் உத்தரவுப்படி வெள்ளியன்று (ஜூன் 2) திருக்கோயில் வசம் சுவாதினம் பெறப்பட்டது. இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.