districts

img

துளிர் திறனறிதல் தேர்வு

கள்ளக்குறிச்சி,மார்ச் 23- கள்ளக்குறிச்சி மாவட்ட அறிவியல் இயக்கம் சார்பில் துளிர் திறனறிதல் தேர்வு 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது.  மாவட்டம் முழுவதும் 1539 பேர் எழுதினர். மாவட்டம் மற்றும் மாநில அளவிலான தேர்வில் வெற்றி பெறும் பள்ளி குழந்தைகளை அறிவியல் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த துளிர் திறனறிதல் தேர்விற்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் வை .கருணாகரன் ஏற்பாடு செய்தார். இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன் மற்றும் வட்டார செயலாளர்கள் உளுந்தூர்பேட்டை செல்வ முருகன், திருநாவலூர் குமரவேல், திருக்கோவிலூர் பச்சையப்பன்,சின்ன சேலம் சரவணன், ரிஷிவந்தியம் அந்தோணி, சங்கராபுரம் தேவேந்திரன் மற்றும் மாவட்டத் தலைவர் ஜாகீர் உசேன் உள்ளிட்டோர் தேர்வை ஒருங்கிணைத்தனர்.