districts

img

பக்கிங்காம் கால்வாய் கரையோர மக்களுக்கு அருகாமையில் வீடு

சென்னை, செப். 29 - பக்கிங்காம் கால்வாய் கரையோரம், லாக் நகர் முதல் மகாலிங்கபுரம் வரை வசிக்கும் மக்களை வெளியேற்றுவதை நிறுத்தி, அருகாமையிலேயே வீடு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. கட்சியின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி 9வது மாநாடு ஞாயிறன்று (செப்.29) திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பார்டர் தோட்டம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும், பம்பிங் ஸ்டேஷன், ரிச்சி தெரு பகுதி மக்களுக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும், மாநகராட்சி உயர்த்திய அனைத்துவகை வரிகளையும் திரும்ப பெற வேண்டும், 50 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் யானை குளம் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு செங்கொடியை மூத்த உறுப்பினர் பி.டி.ராஜன் செங்கொடியை ஏற்றினார். பகுதிக்குழு  உறுப்பினர்கள் என்.நந்தகுமார் வரவேற்க, ஆர்.உஷா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பழனி, பகுதிக்குழு  உறுப்பினர்கள் த.அன்பழகன், என்.சுரேஷ்குமார் மாநாட்டை வழிநடத்தினர். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி  மாநாட்டை தொடங்கி வைத்து  பேச, பகுதிச் செயலாளர் ஆர்.கபாலி வேலை, ஸ்தாபன அறிக்கையையும், பகுதிக்குழு உறுப்பினர் என்.வீரபெருமாள் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெ.தனலட்சுமி, வே.ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்தி பேச, ஆர்.முரளி நிறைவுரையாற்றினார். பகுதிக்குழு உறுப்பினர் எஸ்.டி.ராஜேந்திரன் நன்றி கூறினார். 9 பேர் கொண்ட பகுதிக்குழுவின் செயலாளராக ஆர்.கபாலி தேர்வு செய்யப்பட்டார்.