சென்னை, டிச. 8- பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் கலந்த நிலையில், வெள்ளநீருடன் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து மாசு கட்டுப் பாட்டு வாரியம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், கொடுங்கையூர் கார்கில் நகரில் கச்சா எண்ணெய் கலப்பு தொடர்பாக குழு ஆய்வு மேற்கொண்ட தாகவும், எண்ணெய் மாதிரி களை பரிசோதனை செய்ததில், அவை மணலி சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவ னத்தை சேர்ந்தது என தெரியவந்தது. மேலும் தண்டையார்பேட்டை பகுதியில் இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கச்சா எண்ணெயும் கலந்துள்ளது என தெரிவித்திருந்தது. இந்நிலையில் மழை நீரில் கச்சா எண்ணெய் கலந்ததால் உடல்நல பாதிப்பு என மக்கள் மத்தி யில் குற்றச்சாட்டு அதி கரிக்கவே, தென்மண்டல பசு மைத் தீர்ப்பாயம் தானாக முன்வந்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.