districts

சென்னை முக்கிய செய்திகள்

34 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டம்

சென்னை,செப்.30- பண்டிகை காலத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தெற்கு ரயில்வே சார்பில் 34 சிறப்பு ரயில்களை இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் மூலம் மொத்தம் 302 ரயில் சேவை கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல, இந்திய ரயில்வே துறை மூலம் இந்த ஆண்டு மொத்தம் 6 ஆயிரம் சிறப்பு ரயில்கள் பல்வேறு பகுதி களுக்கு இயக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இத னால் விழாக்கால கூட்ட நெரிசலை தவிர்க்க ஏதுவாக அமையும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தங்கம் விலை குறைந்தது

சென்னை, செப்.30- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை திங்களன்று சவ ரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.56 ஆயிரத்து 640-க்கு விற்பனை செய்யப்படு கிறது. தங்கம் விலை கிரா முக்கு ரூ.15 குறைந்து ரூ.7,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து

பூவிருந்தவல்லி, செப்.30- ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பவன். இவரது நண்பர் வெளிநாட்டில் இருந்து ஞாயிறன்று விமான மூலம் சென்னை வந்தார். அவரை அழைத்துச் செல்வதற்காக, பவன் தனது நண்பர்கள் 3 பேருடன் சென்னை விமான நிலையத்துக்கு வந்துள்ளார். பின்னர் விமான நிலையத்திலிருந்து தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு ஆந்திரா நோக்கி காரில் 5 பேரும் சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், டிரங்க் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் மின் வயர் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த இடத்தில் தடுப்புகள் இருந்தபோது, அதை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதை பார்த்த சக வாகன ஓட்டிகள், உடனடியாக காரில் இருந்த 5பேர் பத்திரமாக மீட்டனர்.

10 மாத சம்பளம் நிலுவை: தேர்தல் பணியாளர்கள் தவிப்பு 

சென்னை,செப்.30- திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, மதுர வாயல், மாதவரம், திரு வொற்றியூர் என 10 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிக்குழு எழுத்தர்களாக சுமார் 41க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்வாகம், நிதி பிரிவிலிருந்து மாதம்தோறும் தொகுப்பு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக இந்த பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

தனி நல வாரியம் அமைக்க வேண்டும் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை 

கள்ளக்குறிச்சி, செப். 30 -  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம்  மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் பகண்டை கூட்ரோடு வானாபுரத்தில் நடைபெற்றது.  எம்.சி.ஆறுமுகம் தலைமை வகித்தார். கடம்பூர் பி.ரமேஷ்குமார் வரவேற்றார். மாநிலத் தலைவர் டி.ஏழுமலை,மாநில செய லாளர் கே.பி .பெருமாள்,விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி உள்ளிட்டோர் பேசினர்.மாவட்டத் தலைவராக எஸ்.முருகன், செயலாளராக எம்.சி.முருகன், பொருளாளர் வி.ஞான பிரகாசம் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.  தீர்மானங்கள் கோழி வளர்ப்பு விவசாயிகள் ஏற்றுமதி யாளர்கள் நலன் கருதி தனி நல வாரியம் அமைக்க வேண்டும், வளர்ப்பு கூலியை நிர்ணயம் செய்ய ஆண்டுக்கு ஒரு முறை கம்பெனி நிர்வாகம் கோழி வளர்ப்பு விவசாயிகள் அரசு அலு வலர்கள் பங்கு பெறும் முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், எளிமையான முறையில் வங்கிக் கடன், இன்சூரன்ஸ் திட்டம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.