சென்னை திருவொற்றியூரிலிருந்து மணலி செல்லும் சாலை அருகே உள்ள பக்கிங்காம் கால்வாயின் மீது பாலம் கட்டும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. ஆமை வேகத்தில் நடக்கும் இப்பணியால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாற்றுப்பாதையான மணலி செல்லும் பாதை குண்டும் குழியுமாக உள்ளதால் அதில் பயணிப்பது பெரும் சவாலாக உள்ளது.