districts

அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்: முதல்வர்

சென்னை,ஜன.13- ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை படிக்கும் அனைத்து அரசுப் பள்ளி மாண வர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவிப்படுத்தப்படும் என்றும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனார்.  அதன்படி, கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில்  முக்கிய ஊராட்சி ஒன்றியச் சாலைகளை வலுப்படுத்தவும், தரம் உயர்த்தவும், “முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்” என்ற புதியத் திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதற்கட்டமாக, 2 ஆண்டு களில் 10,000 கி.மீ. அளவுக்கு ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ. 4,000 கோடியில் தரம் உயர்த்தப்படும். இரண்டாவதாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 15.9.2022 அன்று மதுரையில் தொடங்கப்பட்டது.  1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் முதற்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 இலட்சம் மாணவர்களுக்கு பள்ளியில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.  இத்திட்டம் பெரும்பாலான பொது மக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் பாராட்டப்பட்டு, அதை மகிழ்ச்சியோடு வரவேற்றுக்கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.  இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு, இந்தத் திட்டத்தினை 2023-2024 ஆம் ஆண்டு, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.