districts

img

கீழச்சேரி புனித அன்னாள் பள்ளியில் காலை உணவு திட்டம்: முதல்வருக்கு நன்றி

திருவள்ளூர்,ஜூலை 21- திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரியில் உள்ள புனித அன்னாள் தொடக்கப் பள்ளி, சென்னை மாகாணத்தில் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் ஒன்றாக இருந்தது. கல்வி கூடங்கள் அதிக அளவில் இல்லை. இருக்கும் தொடக்கப் பள்ளியிலும் பெண்கள் படிப்பதற்கு வாய்ப்பளிக்க படவில்லை. இதனால், பெண்கள் அறியாமை இருளில் அடுப்பங்கரை புகையில் வாழ்வை நடத்திக் கொண்டிருந்தனர்.  இந்த சூழ்நிலையில், என்னை வாட்டி பத்ரி ஞானம்மாள் 1862 இல் தனது சொத்துக்களை விற்பனை செய்து பணம் திரட்டி கீழச்சேரியில் சொந்தமாக நிலம் வாங்கினார். பின்னர் 3.5.1863 ஆம் ஆண்டு அன்னை ஞானம்மா வின் முயற்சியால் அந்த நிலத்தில் புனித அன்னாள் தொடக்கப்பள்ளி துவக்கப்பட்டது. மேலும், தொலை தூரத்தில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி பயில சிறுவர் இல்லம் ஒன்றையும் 4.6.1863 இல் துவக்கினார். தற்போது 160 ஆம் ஆண்டில், கல்வி சேவையின் காரண மாக அரசு உதவி பெறும் பள்ளிகள் வளர்ச்சியடைந்துள்ளது. கல்வியாளர்கள், அரசியல் தலை வர்கள், திருச்சபை தலைவர்கள் பலரும் இப்பள்ளிக்கு வருகை தந்து பெண் கல்விக்கு வித்திட்ட அன்னையை வாழ்த்தி இருக்கிறார்கள்.   இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெருந்தலைவர் காம ராஜர் பிறந்த நாளான ஜூலை 15 அன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி களிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரிவுபடுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து மேலும் பெருமை சேர்த்துள்ளார். உலகத்திற்கே வழிகாட்டும் உன்னதமான திட்டத்தை துவக்கி வைப்பதற்காக, தங்கள் சபையின் நிறுவனர் இறை ஊழியர், தாட்டி பத்ரி ஞானம்மாவின் 150வது நினைவு ஆண்டில் இந்த பள்ளியை தேர்ந்தெடுத்த முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புனித அன்னாள் கலை, அறிவியல் கல்லூரியின் தலைவர் மற்றும் சென்னை மாதவரம் புனித அன்னம்மாள் சபை முன்னாள் தலை வர் அன்னை லீமா ரொசாரியோ நன்றி தெரி வித்துள்ளார். மேலும்,  வரலாற்று சிறப்பு மிக்க காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து, கல்வியை மேம்படுத்துவதற்காக உரிய திட்டத்தை செயல்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்லாண்டு வாழவும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.