சென்னையில் தொடர் மழை பெய்ததையடுத்து திருவொற்றியூர் 4ஆவது வார்டுக்குட்பட்ட எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனியில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் காலை உணவு வழங்கினார். சிபிஎம் பகுதி குழு உறுப்பினர் கே.வெங்கட்டையா, நிர்வாகிகள் தனலட்சுமி, சேகர், சுகன்யா ஆகியோர் உடன் இருந்தனர்.