ஆற்காடு, மே 16-
ஆற்காடு அடுத்த கணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன். அதிமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். இவரது மனைவி வனிதா. இவர்களது மகள் யுத்திகா. கடந்த சில நாட்க ளாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் திங்கட்கிழமை இரவு அவர்கள் அனைவரும் மாடியில் தூங்கினர்.
செவ்வாய்க்கிழமை காலை ஜெகன்நாதன் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவை உடைத்து அதில் இருந்த 70 சவரன் நகைகள், 750 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெகன் நாதன் ஆற்காடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.