districts

    கர்நாடக மாநிலம் ஆனேக்கல் ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

கிருஷ்ணகிரி, மே 17-

    கர்நாடக மாநிலம் ஆனேக்கல் எத்திகொண்டபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் ஹேமந்த் (10). இந்நிலையில் வெங்கடேசன் தனது மகனை  அழைத்து கொண்டு கிருஷ்ணகிரி அருகே உள்ள முனிகவுண்டன் ஏரிக்கு வந்தார்.

   அப்போது அங்கு தனது மகனுடன் அவர் குளிக்கச் சென்றார். இதில் ஹேமந்த் நீச்சல் தெரியாமல் ஆழத்திற்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.