அம்பத்தூர்,ஆக.12-
அம்பத்தூர் சண்முகபுரம் அருகே புழல் ஏரியின் கரைப்பகுதியில் வாலிபரின் உடல் ஒன்று தண்ணீரில் மிதந்து வந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அம்பத்தூர் போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் அம்பத்தூர் சிவப்பிரகாசம் நகரை சேர்ந்த வெங்கடேசன் (34) என்பது தெரிந்தது. பி.டெக் பட்டப்படிப்பை முடித்து வேலை கிடைக்காத விரக்தியில் நண்பருடன் பழல் ஏரி பகுதியில் சுற்றித்திரிந்த அவர் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.