திருவள்ளூர், ஏப் 23- உலக புத்தக தினத்தையொட்டி செவ்வாயன்று (ஏப் 23), திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் காலை 7மணி முதல் மாலை 7 மணிவரை புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறு, குழந்தைகள், முதியோர், பெண்கள் என அனைத்து தரப்பினருக்குமான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. சுமார் ரூ.12 ஆயிரம் அளவிற்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளைத் தலைவர் ரா.பாலாஜி தலைமையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி சிறப்பு அழைப்பாளர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர் எம்.நாகலிங்கம் திறந்து வைத்தார். மாவட்ட தலைவர் எஸ்.குமார், மாவட்ட துணைத் தலைவர் மோசஸ்பிரபு,கேஇஎன்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சா.ஞானசேகரன், கிளை செயலாளர் சீ.அபிலாஷ், கவுரவ தலைவர் இ.பட்டாபிராமன், சமூக ஆர்வலர்கள் கே.சி.பிரேம் பாபு, எஸ்.ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.