பெசன்ட்நகர் கடற்கரையில் ரூ.1.61 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையில் கால் நனைத்து மகிழ்ந்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மரப்பலகை பாதையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே,சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.