districts

img

சென்னையில் ப்ளு காய்ச்சல் பரவல்! குழந்தைகள் அதிகமாக பாதிப்பு

சென்னை, செப்.13- கொரோனா அச்சுறுத்தல் விலகி உள்ள நிலையில் முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பொது மக்கள் கைவிட்டு இருப்பதால் மீண்டும் வைரஸ் காய்ச்சல்கள் சென்னையில் பரவத் தொடங்கி உள்ளன. கடந்த சில தினங்களாக இந்த காய்ச்சலுக்கு பாதிக்கப்படும் சிறுவர்கள், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் இருமல், காய்ச்சல் பிரச்சினைகளுடன் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. பொதுவாக ப்ளு வைரஸ் காய்ச்சல் குழந்தைகளைத் தான் அதிகம் பாதிக்கும். ஜலதோஷம், மிக அதிக காய்ச்சல், விடாமல் ஏற்படும் இருமல் ஆகியவை ப்ளு வைரஸ் காய்ச்சலின் அறி குறியாகும். பொதுவாக உடல் வலி, தலைவலி, சோர்வு, தொண்டை வறட்சி, வாந்தி ஏற்படுதல், வயிற்று வலி போன்றவையும் ஏற்படக் கூடும்.  ப்ளு வைரஸ் காய்ச்சல் பெரும்பாலும் 2 முதல் 4 நாட்களில் குணமாகி விடும். சிலருக்கு மட்டும் இருமலுடன் ஒரு வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. இந்த அறி குறிகளுடன் தான் தற்போது சென்னையில் அரசு மருத்துவமனைக்கு வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ப்ளு வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதாக பரவிவிடும். ப்ளு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இரு மும் போது வெளிப்படும் துளிகள் மூலம் மற்ற வர்களை பாதிக்கும். ப்ளு வைரஸ் காய்ச்சல் ஏற்படு பவர்களுக்கு சளி தொல்லை இருந்து கொண்டே இருக்கும். எனவே காய்ச்சல், இருமல் இருப்பவர்கள் பக்கத்தில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொண்டு செல்வது பாது காப்பானது.

;