districts

செய்தி வாசிப்பாளர் நினைவாக கள்ளக்குறிச்சியில் ரத்த தான முகாம்

கள்ளக்குறிச்சி, ஆக. 10- கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர் கோட்டை பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறு வனமான நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சவுந்தர்யா. இவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது நினைவாக தமிழ்நாடு பத்திரி கையாளர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில், ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியின் தாளாளர் யதீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பி னர் ஏ.ஜெ.மணிகண்டன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்டக் குழு உறுப்பினர் எம். ஆறுமுகம், ஒன்றி யச் செயலாளர்கள் டி.எஸ்.மோகன், ஜெ.ஜெயக்குமார், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி, உளுந்தூர் பேட்டை நகர செயலாளர் ஈ.சதீஷ்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் நகரின் பல்வேறு பகுதி களை சேர்ந்த கல்லூரி, பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் தன்னார்வலர்கள் என பலரும் ஆர்வமுடன் ரத்த தானம் செய்தனர். இந்த நிகழ்வின் போது, சௌந்தர்யாவின் தாயாரிடம் முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கி னார். உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர் மருத்துவர் அன்புமணி மற்றும் கூடுதல் கலந்து கொண்ட னர்.