சிதம்பரம், ஆக.16- சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழக இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சுதந்திர தின ரத்ததான முகாம் கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவ மனையில் நடைபெற்றது. செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பு ளர் தி.ராஜ் பிரவீன் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்கள் ர. நீலகண்டன் மற்றும் சிதம்பர ராஜா உள்ளிட்டோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்தனர். இந்த முகாமில் அண்ணா மலைப் பல்கலைக் கழக உளவி யல் துறை தலைவர் முனைவர். மு. கோவிந்த், அரசு கடலூர் மருத்துவமனை தலைமை கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன், நிலைய மருத்துவர் பாரி, குருதி வங்கி மருத்துவர்.வள்ளுவன், சமூக ஆர்வலர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.