கடலூர், ஆக.18- சிவதாண்டவ நாட்டியாலய சார்பில் பரத நாட்டியம் அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது. முனைவர் ஞானசேகரன் வரவேற்றார். சட்ட மன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் துவக்கி வைத்தார். இமாகுலேட் கல்லூரி முதல்வர் சுசிலா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் மாணவர்கள் பவித்ரா, வைஷ்ணவி, ஸ்ரீ பூஜா, சஹானா, ஸ்வேதா, வினுஜா, ஹரிணி, பவத் ராணி, பவதாரணி, அஷ்விதா, ஆதி லக்ஷ்மி ஆகியோர் அரங்கேற்றம் செய்தனர். பரத நாட்டியம் அரங்கேற்றம் செய்த மாணவிகளுக்கு சிபிஎம் கடலூர் மாவட்டச்செயலாளர் கோ.மாதவன் நினைவு பரிசு மற்றும் சான்றுகளை வழங்கினார். இசைக்கலை ஞர்கள் சூசை ராஜ், அருண், சரவணன், புஷ்ப கணபதி, ஞானசேகரன் பங்கேற்றார் கள். நிறைவாக மகாலட்சுமி நன்றி கூறினார்.