கிருஷ்ணகிரி, நவ.12- தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலத்தில் காவல் நிலையத்தின் பின்புறம் தினசரி காய்கறி சந்தையில் 70 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இங்கு சிறு குறு விவசாயி களும் பல வியாபாரிகளும் காய்கறி கீரைகளை விற்று வருகின்றனர். காடு உத்தன பள்ளியை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவன் தன் நிலத்திலிருந்து சாகுபடி செய்த கொத்த மல்லி கட்டுகளை சந்தை யில் வைத்து விற்றுள்ளார். அங்கு வந்த ஒப்பந்ததாரரின் பினாமியான ஒரு வியாபாரி விஜயலட்சுமியின் கணவன் விற்றுக் கொண்டிருந்த கொத்தமல்லி கட்டுகளை எடுத்து குப்பையில் வீசிய தாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அந்த நபர் சந்தை அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்தார். மேலும் விவசாயிகளை விற்பனை செய்ய விடாமல் அடிமாட்டு விலைக்கு வாங்கி விற்று கொள்ளை லாபம் பெறும் ஒப்பந்ததாரரின் பினாமியான வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊராட்சி நிர்வாகம் தலையிட்டு வாரச் சந்தையில் கடைகளுக்கு வாடகை மற்றும் தினசரி சுங்க கட்டண விவரம், பொதுமக்களுக்கு தெரியும் படி அறிவிப்பு பலகையில் எழுதி வைக்க வேண்டும். சில ஒப்பந்ததாரர்களின் பினாமிகளால் ஒன்றிய கவுன்சிலர் விஜய லட்சுமியின் கணவருக்கே இந்த நிலை என்றால் காய்கறிகள் விற்கும் ஏழை விவசாயிகள் நிலை என்னவாகும்.எனவே இதுபோன்ற அவல நிலை தொடராமல் பேரூ ராட்சி உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும்,இனிமேலும் இதுபோன்று சிலரின் அடாவடி தொடருமானால் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று காய்கறி விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.