ராணிப்பேட்டை, ஆக. 26 - ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், குக்குண்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்டது சின்ன குக்குண்டி கிராமம். இந்த கிராமத்தில் தோப்புத் தெருவில் கிராம நத்தம் நிலத்தில் 132 சதுர மீட்ட பரப்புக்கு சாலை கிராம கணக்கில் உள்ளது. இதில், 3 சதுர மீட்டர் பரப்பள வுக்கு தனிநபர் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது. இதனால் பொது போக்குவரத்து, சவ ஊர்வலங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், விவசாய விளைப் பொருட்களை எடுத்து செல்ல முடியவில்லை. எனவே, அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று விவ சாயிகள் குறைதீர் கூட்டங்களில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, பலமுறை விசாரணை நடைபெற்றது. அதன் கோப்புகள் ராணிப்பேட்டை கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகங்களில் கிடப்பில் உள்ளது. இந்நிலையில், திங்களன்று (ஆக. 26) பிரச்சினைக்குரிய பகுதியில் அவசர, அவசரமாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விவ சாயிகள் சங்கத்தினர் தலையிட்டு தடுத்து நிறுத்தினர். அப்போது, அங்கு வந்த ஊராட்சிமன்றத் தலைவரின் கணவரிடம் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு, மாவட்ட ஆட்சியர், வருவாய் அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் நேரில் பார்வையிட்டார். அப்போது, அதிகாரிகளின் விசாரணை இறுதி அறிக்கை வந்தவுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சாலை அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். கிட்டு, செயலாளர் எல்.சி. மணி, பொருளாளர் சி. ராதாகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் டி.சந்திரன், செயலாளர் பி. ரகுபதி கலந்து கொண்டனர்.