ராணிப்பேட்டை, அக். 10 - சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட த்திற்கு ஆதரவாக ராணிப்பேட்டை பெல் ஊழியர்கள் நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் பிரச்சனையை தீர்க்கத் தவறிய சாம்சங் நிறுவனத்தையும், தமிழக அரசையும் கண்டித்து முழக்க மிட்டனர். தொடர்ந்து போராடும் சாம்சங் தொழி லாளர்களுகக்காக பெல் நிறுவன வாயிலில் துண்டேந்தி சுமார் ரூ. 50 ஆயிரம் நிதி வசூல் செய்தனர். இதில் பிஎபிஎஸ்யூ பொதுச்செயலாளர் ஞானசேகரன், பிஏபி இயூ / என்எப்ஐடியு பொதுச் செயலாளர் நந்தகுமார், பிஏபிஇஜிடியு /ஐஎன்டியுசி அமைப்புச் செயலாளர் பாலமுருகன் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.