விழுப்புரம், ஆக. 18-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள காட்டுச்சிவிரி கிராமத்தில் ஏராளமான பெண்கள் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்து வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வெள்ளி யன்று (ஆக.18) ஏரிக்கரை யில் மராமத்து பணி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது புதர் பகுதியை தூய்மை செய்ய முயன்றுள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அங்கிருந்து வெளி யேறிய விஷ தேனீக்கள் பெண்களை விரட்டி விரட்டி கொட்ட தொடங்கியது. இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
மேலும் சில பெண்கள் மயக்கமடைந்து விழுந்த னர். இதையடுத்து உடனடி யாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.