சென்னை,ஜன.30- - நீதிமன்ற உத்தரவை ஆய்வு செய்தபிறகு, பர்மா காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சி கூட்டம் திங்களன்று (ஜன.30) ரிப்பன் மாளிகையில் நடை பெற்றது. கேள்வி நேரத்தில் உறுப்பினர் சதீஷ்குமாருக்கு (வார்டு 182) பதிலளித்த மேயர் மேற்கண்டவாறு தெரி வித்தார். உறுப்பினர் தனியரசு (வார்டு 10) எழுப்பிய வினாவிற்கு பதிலளித்த மேயர், நகர்ப்புற வேலை வழங்கும் திட்டத்தில் மண்டலம் 4 மற்றும் 6 இடம்பெற்றுள்ளது. இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு விரிவாக்கம் செய்யும் போது திருவொற்றியூர் மண்ட லத்தை சேர்க்க பரி சீலிக்கப்படும் என்றார். உறுப்பினர்களுக்கு ஊதியம்? நேரமில்லா நேரத்தில் பேசிய உறுப்பினர் சேட்டு (வார்டு 24), கவுன்சிலர்களுக்கு அமர்வு படிக்கு மாற்றாக மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதற்கு பதிலளித்த மேயர், “விரைவில் நல்ல செய்தி வரும். இறுதி செய்து விட்டு நல்ல செய்தி அறி விக்கப்படும்” என்றார். க்யூ ஆர் கோடு பாஸ் மன்ற உறுப்பினர்க ளுக்கு முதன் முறையாக வாகன அடையாள அட்டையை (பாஸ்) மாநகராட்சி வழங்கியுள்ளது. இந்த பாஸில் உள்ள க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்தால், கவுன்சிலர் பெயர், வார்டு எண், மண்டலம், முகவரி, தொடர்பு எண், செல்லுபடி யாகும் காலம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றி ருக்கும்.