விழுப்புரம், ஜூன் 21- சுடுகாட்டு பாதையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட நாயனூர் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் உடல்களை எடுத்து செல்ல காலங்காலமாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு பாதையை (ஓடை புறம் போக்கு நிலம்), சிலர் அது தங்களது இடம் எனக் கூறி பாதையின் குறுக்கே இரும்பு கதவு அமைத்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்துச்செல்ல முடியாமல் அந்த கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலை யில் அங்கு அமைக்கப்பட்டுள்ள இரும்பு கேட்டை அகற்றக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி தலை மையில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், வட்டத் தலைவர் ஏ.ஏழு மலை, துணைச்செயலாளர்கள் எம்.செல்வ ராஜ், செங்கேணி, துணைத்தலைவர்கள் பாபு, முருகேசன், கே.ஏழுமலை ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.