ஆவடி, நவ. 23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பாலகிருஷ்ணன் புதனன்று (நவ. 22) காலமானார். அவருக்கு வயது 83. ஆவடி பட்டாபிராம் கக்கன்ஜி நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் மா.பூபாலன், ராபர்ட் ராஜ், நடராஜன், வடிவேலு, ரகுராமன், கிருஷ்ணமூர்த்தி, கோதண்டம் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் வியாழக்கிழமை (நவ. 23) திருமுல்லைவாயலில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.