அலுவலர்களின் அலட்சியத்தால் 100 நாள் வேலை கிடைப்பதில் சிக்கல்
செங்கல்பட்டு, டிச.27- அலுவலர்களின் அலட்சியத்தால் கோப்புகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் கிராம மக்களுக்கு 100 நாள் வேலை கிடைப்பது சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அனைத்திந்திய ஜனநாயகமாதர் சங்கம் விவசாய தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.ஜெயந்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன் மாவட்ட மாவட்டத் தலைவர் பி.சண்முகம் மாவட்ட பொருளாளர் வி.சசிகுமார் ஆகியோர் மாவட்ட திட்ட அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது, இந்தப் போராட்டத்தின்போது களத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதியளிப்பு கடிதங்கள் வழங்கப்பெற்றும் பல கிராமங்களில் வேலை அளிக்கப்படவில்லை ஏனெனில் அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் மதிப்பீடு மாவட்ட திட்ட முகமைக்கு அனுப்பி உள்ள நிலையில் இதுவரை பணி உத்தரவு வழங்கப்படாமல் மாவட்ட திட்ட முகமை அலுவலகத்தில் நிலுவையில் உள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எங்களுக்கு வழங்கிய உத்தரவாத கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகம் அருகே விபத்துக்குள்ளான அவசர ஊர்தி
மதுராந்தகம், டிச. 27- மதுராந்தகம் பகுதியில் உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருப்பூரில் இருந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று நோயாளியை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வியாழனன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, மதுராந்தகம் அருகேயுள்ள அய்யனார் கோயில் எனப்படும் பகுதியில் ஆம்புலன்ஸ் வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், நோயாளியுடன் வந்த 5 பெண்கள் உள்பட 6 பெண்கள் காயமடைந்தனர். இதனால், திருச்சி-சென்னை செல்லும் சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்த மதுராந்தகம் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பூப்பந்தாட்ட போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி
சென்னை, டிச.27- தமிழக பள்ளி கல்வி துறை சார்பில், சென்னை வரு வாய் மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டி, எண்ணூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சென்னையின் உள்ள அரசு பள்ளியில் இருந்து 14 மற்றும் 19 வயதுக்குட்பட்ட இருபாலார் மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் 14 மற்றும் 17 வயதுக்குட்பட்ட 2 ஆண்கள் பிரிவிலும் எண்ணூரில் உள்ள கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற 2 அணிகளும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மதுரை மற்றும் தேனியில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றில் பல்லவர் கால சிற்பம் கண்டெடுப்பு
கடலூர், டிச.27 – கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள என திரிமங்கலம் தென்பெண்ணை ஆற்று பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கள ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்களாக செப்பு நாண யம், அகல்விளக்குகள், கீரல் ஓடுகள், சுடுமண் புகைப் பிடிப்பன் ஆகியவை கண்ட றியப்பட்டுள்ளது. இதில், சுமார் 1200 ஆண்டுகள் பழமை யான விநாயகர் சிற்பம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. கண்டு பிடிக்கப்பட்டுள்ள விநாயகர் சிற்பம் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது எனவும் கல்வெட்டு ஆய்வாளர் இமானுவேல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் புகைப்பட கண்காட்சி
கள்ளக்குறிச்சி,டிச. 27 – கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். சின்னசேலம் ஒன்றி யம், ஏர்வாய்ப் பட்டினம் பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப் பட்டுள்ள அரசின் திட்டங்களின் தொகுப்பும், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகளும் இடம் பெற்றுள்ளது.
அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி பலி சடலத்துடன் மக்கள் போராட்டம்
திருவண்ணாமலை, டிச.27- விவசாய நிலத்தில் பூப்பறிக்க சென்றவர், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் உயிரிழந்தார். இதையடுத்து, வெள்ளியன்று (டிச.27) பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், ஈச்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இரவது, நிலத்துக்கு அருகில் மின்கம்பி தாழ்வாக சென்றுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்த மின்சார ஊழியர்கள், மின் கம்பியை துண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பூ பறிப்பதற்காக தனது நிலத்துக்கு சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மித்ததால், மின்சாரம் தாக்கி அதே இடத்தில் உயிரிழந்தார். மின்கம்பியை அறுத்த ஊழியர்கள் மின் விநியோகத்தை துண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், விநாயக மூர்த்தியின் உறவினர்களும், கிராம மக்களும் திருவண்ணாமலை -வேலூர் பிரதான சாலைய மல்லவாடி மின்சார வாரிய அலுவலகம் முன்பு விநாயகமூர்த்தியின் சடலத்தை வைத்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை கிராமிய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில் மோதி இருவர் பலி
திருவள்ளூர், டிச.27- திருவள்ளூர் அருகே இருவேறு இடங்களில் தண்ட வாளத்தை கடக்க முயன்ற போது இருவர் ரயில் மோதி பலியாகினர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர்-செஞ்சிபானம் பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழனன்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். இதேபோல், திரு வள்ளூர் அடுத்த மணவூர்-திருவாலங்காடு ரயில் நிலை யங்களுக்கு இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதி அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இறந்தவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் போன்ற விவரங்கள் தெரியவில்லை. மேற்கண்ட இரண்டு சம்ப வங்கள் குறித்தும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.