districts

மீண்டும் பயிர்காப்பீட்டு வணிகத்தில் சோழா எம்,எஸ் காப்பீட்டு நிறுவனம்

சென்னை,மே 4-

    முருகப்பா குழுமம் மற்றும் ஜப்பானின் மிட்சூய் சுமிடோமா இன்சூரன்ஸ் குழுமத்தின் கூட்டு நிறுவனமான சோழமண்டலம் எம்.எஸ். இன்சூரன்ஸ் நிறுவனம்  மூன்று  வருட இடைவெளிக்குப் பிறகு பயிர்க் காப்பீட்டு வணிகத்தில்  மீண்டும் நுழையத் திட்டமிட்டுள்ளது.

   இதற்காக மறுகாப்பீட்டு ஏற்பாடுகளையும் செய்துள்ள தாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வி சூர்யநாரா யணன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயிர்க் காப்பீட்டு வணிகம் சுமார் ரூ.25,000  கோடியாக இருக்கும் என்றும், அதில் ரூ .12,000 கோடியை  பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் கையாள்வதாகவும், மீதமுள்ள ₹13,000 கோடி வணிகம் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் பிரித்துக்கொள்வதாகவும் கூறினார்.

   சில மாநில அரசுகளிடமிருந்து பிரீமியம் பெறாதது போன்ற பிரச்னைகளால் பயிர்க் காப்பீட்டுத் தொழிலில் இருந்து நிறுவனம் விலகியதாக அவர் மேலும் தெரிவித்தார்.

   பொதுக் காப்பீட்டுத் துறையில், கிட்டத்தட்ட 80 சதவீத வணிகம் மோட்டார் மற்றும் உடல்நலக் காப்பீட்டிலிருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து சொத்துக் காப்பீடு (12 சதவீதம்) மற்றும் மீதமுள்ளவை பயிர்க் காப்பீட்டில் இருந்து  வருகிறது என்றார் அவர். கடந்த நிதியாண்டில்  நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ .264 கோடியாக இருந்தது. மார்ச் 2023 நிலவரப்படி, சோழ எம்எஸ் இன் நிகர மதிப்பு ₹2,160 கோடி என்றும் அவர் கூறினார்.