மனித உரிமைப் போராளி பி. வி. பக்தவச்சலம் 17வது நினைவு தினத்தையொட்டி, “பெண்களின் மீதான தொடர் வன்முறை வேரும்...தீர்வும்...” என்ற தலைப்பில் சென்னையில் செப். 22 அன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நீதியரசர் கே சந்துரு சிறப்புரையாற்றினார். மருத்துவர்கள் பி .வி.வெங்கட்ராமன், எஸ். . ஜெகதா, சி. எஸ். ரெக்ஸ் சற்குணம். ஏ .ஆர். சாந்தி, பத்திரிகையாளர்கள் மயிலைபாலு, பொன். தனசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வழக்கறிஞர் பி. எஸ். அஜிதா எழுதிய “சட்டங்களை அறிவோம்! வன்முறைகளை களைவோம்!”என்ற நூல் வெளியிடப்பட்டது. கருத்தரங்க நிறைவில் திணைநிலவாசிகள் வழங்கிய ‘துளிர் தின்னும் வேலிகள்’ நாடகம் நடைபெற்றது.