சென்னை, அக். 19- ஐப்பசி மாதம் தொடக்கம், நவராத்திரி பண்டிகை, சுபமுகூர்த்த நாட்கள், விசேஷ நாட்கள், ஆயுத பூஜை ஆகியவை தொடர்ச்சியாக வர உள்ளதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. ஓசூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணா மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி சென்னை கோயம்பேடு பூ மார்கெட்டுக்கு சுமார் 40 வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. புரட்டாசி மாதம் தொடங்கியதில் இருந்து முகூர்த்த நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்கள் போன்றவை இல்லாததால் பூக்களின் விற்பனை மந்தமாக இருந்தது. இதன் காரணமாக தினசரி சுமார் 10 டன் அளவிலான பூக்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் தேக்கமடைந்து வீணாக குப்பைகளில் கொட்டப் பட்டது. இந்நிலையில் நவ ராத்திரி பண்டிகை கடந்த 15ஆம் தேதி தொடங்கியதில் இருந்து, பூக்கள் விற்பனை மீண்டும் அதிகரித்து, விலை யும் அதிகரிக்கத் தொடங்கி யுள்ளது. ஐப்பசி மாதம் தொடக்கம், நவராத்திரி பண்டிகை, சுபமுகூர்த்த நாட்கள், விசேஷ நாட்கள், ஆயுத பூஜை போன்றவை அடுத்தடுத்து வர உள்ளது. இதனால் பூக்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சாமந்தி, பன்னீர் ரோஜா உள்ளிட்ட பூக்கள் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப் பட்டது. ஆனால் வியா ழனன்று சாமந்தி ஒரு கிலோ ரூ.150க்கும், பன்னீர் ரோஜா ரூ.100, மல்லி ரூ.700, கனகாம்பரம் ரூ.800 வரை விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி மாதம் முழுவதும் பூ விற்பனை மிகவும் மந்தமாகவே நடந்த தால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. தற்போது ஆயுத பூஜை பண்டி கையை முன்னிட்டு பூக்கள் விற்பனை மேலும் சூடு பிடிக்கும் என்றும், பூக்க ளின் விலையும் மேலும் அதி கரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் மொத்த வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.