நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் என்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருபெருமந்தூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் மற்றும் தொகுதி தேர்தல் அதிகாரி ச.அருண்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பாக 100 விழுக்காடு வாக்களிப்பதின் அவசியம் குறித்து கோலம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.