districts

img

நவீன வேளாண் நிர்வாகம்: ஓசூர் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி, நவ.29- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மேக் மீ வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த இளநிலை மற்றும் டிப்ளமோ வேளாண் மாணவர்கள் நவீன வேளாண் நிர்வாகம்  என்னும் திட்டத்தை செயல் படுத்தி வருகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் இலவச மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, பயிர்  சாகுபடி மற்றும் கலை  நிர்வாகம், பயிர் சுழற்சி  விளக்க முறை, ஊட்டச்சத்து பரிந்துரை, மானியம், அரசு திட்டங்கள். மேம்பட்ட வேளாண் தொழில் நுட்பங்கள் பரிந்துரை, புதிய உப கரணங்களின் விழிப் புணர்வு, இயற்கை விவசா யம் பற்றிய விழிப்புணர்வு,  மனிதவள மேலாண்மை, அறுவடை, அறுவடைக் குப்பின் மேலாண்மை. பூச்சிக்கொல்லிகள் மற்றும் தாவர நோய்கள் பற்றிய விழிப்புணர்வு போன்ற சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதற்கட்டமாக ஓசூர் மாநகராட்சியில் அமைந்துள்ள கார் கொண்டப்பள்ளி, பூசின பள்ளி கிராம விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் அவரை, பீன்ஸ், சாமந்தி, மாங்காய், தக்காளி, மிளகாய் ஆகிய பயிர்களை பற்றி கலந்துரையாடினர். அப்போது குறைந்த முதலீட்டில் அதிக மகசூல் பெறுவது பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இத்திட்டத்தின் கீழ் 110  ஏக்கர் நிலங்களை பயனடைய செய்துள்ளனர்.