கள்ளக்குறிச்சி, அக். 28- மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரசின் திட்டங்கள் மற்றும் அதனைப் பெரும் முறைகள் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை மாவட்ட ஆட்சியர் தலைவர் பிரசாந்த் வழங்கினார். எனவே இந்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் அரசின் அனைத்துத் திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் உரிய முறையில் அறிந்து,நலத்திட்ட உதவிகள் பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.