திருவள்ளூர், ஆக.13- ஹிரோஷிமா, நாகசாகி தினத்தில் அமை தியை வலியுறுத்தி ஒரு லட்சம் காகித கொக்கு கள் செய்து விழிப்புணர்வு எற்படுத்தினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திருவள்ளூர் மற்றும் வட சென்னை மாவட்டக் குழுக்கள் இணைந்து உலகளவில் அணு ஆயுத போர் இல்லாத சமூகத்தை உருவாக் கும் நோக்கத்துடனும் அமைதியையும், மனித நேயத்தை வலி யுறுத்தியும் சனிக்கிழமையன்று அம்பத்தூர் அருகே உள்ளே புதூர் தாங்கல் பூங்காவில் லட்சம் காகித கொக்குகள் செய்யும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை சென்னை மாநகராட்சியின் 7வது மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆசிரியர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் தேவராஜ் நிகழ்வை துவக்கி வைத்து பேசினார். எழுத்தாளர் இ.பா.சிந்தன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஜெயநாராயணா, வட சென்னை மாவட்ட செயலாளர் அரவிந்து, மாநில செயற்குழு உறுப்பினர் மோசஸ் பிரபு ஆகியோர் வாழ்த்தி பேசினர். புதூரில் உள்ள சேது பாஸ்கரா பள்ளி மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் லட்சத்திற்கான மேற்பட்ட கொக்கு களை செய்து கொடுத்தனர். நிறைவாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் போரை உடனடி யாக நிறுத்தக்கோரியும் அமைதி வழியில் தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.