districts

img

சமூகத்தில் சிறப்பாக செயல்படும் நிறுவனங்களுக்கு விருதுகள்

சென்னை, நவ.15- நாட்டின் முன்னணி ஆலோசனை நிறுவனமான அவ்தார் குழுமம், 2024-ஆம் ஆண்டு சமூகத்தில் சிறப்பாக செயல்பட்ட வர்களுக்கான  அவ்தார் & செரமவுண்ட் விருதுகளை அறி வித்துள்ளது.  சென்னையில் நடைபெற்ற அவ்தார் மற்றும் செரமவுண்ட் எட்டாவது மாநாட்டில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன. பாலின சமத்துவத்திற்காக போராடுதல் மற்றும் அனைவரு க்குமான  சமூகத்தைக் கட்டமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. பணியிடத்தில் பெண்கள் மீதான மனநிலை மற்றும் அணுகுமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்திய சக ஆண் ஊழியர்களை இந்த விருது கொண்டாடுகிறது மாநாட்டில் பேசிய அவ்தார் குழுமத்தின் நிறுவனர்-தலைவர் டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ், “அனைவருக்குமான சமத்துவத்திற்கான நாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பே நீடித்த மாற்றத்திற்கான முக்கிய அம்சமாகும் என்றார். சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் திறன் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாடுபட்ட நிறுவனங்க ளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  முன்னதாக நடைபெற்ற மாநாட்டில் பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்து விவாதிக் கப்பட்டது.