சென்னை, ஜூலை 29- விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுமையான நடைமுறைகளை கவுரவிக்க பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளி டமிருந்து விருதுக்கான விண்ணப்பங்களை அவுட்குரோ வரவேற்றுள்ளது. நாட்டில் முதன்முறையாக, செயற்கை நுண்ணறிவு ஆற்றலின் மூலம் விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கிவரும் வேகூல் ஃபுட்ஸ், “அவுட்குரோகிசான் பிரகதி விருதுகள்’’ ஒன்றை தொடங்கி யுள்ளது. வேளாண் துறையில் தொழில் நுட்பத்தால் முன்னெடுக்கப்படும் புத்தாக்க நடவடிக்கைகளை அடையாளம் கண்டு அவைகளை பலரும் அறியுமாறு பிரபலப் படுத்துவது இதன் குறிக்கோளாகும். விவசாயிகள் மேற்கொள்ளும் புதுமை யான, சிறப்பான வேளாண் நடைமுறைகளை பிற விவசாயிகளும் அறியுமாறு காட்சிப் படுத்துவதற்கான ஒரு தளமாக வும் இது இருக்கும்என்று வேகூல் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது,மேலும் தகவல்களைப் பெற +91-9150095207 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.