சென்னை, நவ.13- இந்தியாவின் முன்னணி மக்கள் தொடர்பு அமைப்பாகிய பப்ளிக் ரிலேஷன்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (பிஆர்சிஐ), சென்னையைச் சேர்ந்த கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனத்திற்கு சிறந்த மக்கள் தொடர்புத் துறைக்கான தேசிய விருதினை வழங்கியுள்ளது. கர்நாடக மாநிலம், மங்களுருவில் நடைபெற்ற பிஆர்சிஐ 14 ஆவது விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் நிறுவனத்திற்கு டிஜிட்டல் பப்ளிஷிங் பிரிவில் வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்நிறுவனம், மக்கள் தொடர்புத் துறை சார்ந்த நூறு கட்டுரைகளை (பிளாக்ஸ்) இணையதளத்தில் வெளியிட்டு இத்துறை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதினை நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிரிவுத் தலைவர் ப. அமர்நாத், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி. கிருஷ்ண பட்-டிடமிருந்து பெற்றுக் கொண்டார்.