districts

img

சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயனுக்கு விருது

சென்னை, பிப். 18  சக்தி மசாலா நிறுவனங்களின் தன்னார்வ அமைப்பான -  சக்தி தேவி அறக்கட்டளையின் 23-ஆவது ஐம்பெரும் விழா, ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது.  விழாவை நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் சாந்தி துரைசாமி தொடங்கி வைத்தார். நிறுவனங்களின் தலைவர் முனைவர்  பி.சி. துரைசாமி வரவேற்றார். பண்ணாரி அம்மன் குழுமத் தலைவர் எஸ். வி. பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பொது வாழ்வில் சிறப்பாகப் பணி புரிந்தமைக்காக சிபிஐ முன்னாள் இயக்குனர் டாக்டர் டி. ஆர். கார்த்திகேயனுக்கு,  அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தார்.   இந்திய புலனாய்வுத் துறை முன்னாள் இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக் கொண்டு, சக்தி முதியோர் நலம் மற்றும் பக்கவாத பிசியோதெரபி பயிற்சி மையத்தைத் துவக்கி வைத்து உரையாற்றினார். இவ்விழாவில், கல்வி ஊக்கத் தொகை, உயர் கல்வி உதவித் தொகை மற்றும் பல அமைப்புகளுக்கும், தனி நபர்களுக்கும் பல்வேறு வகையான சேவைகளுக்குமாக ஒரு கோடியே 24 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள்  வழங்கப்பட்டன.