districts

கால்நடை உரிமையாளர்களுக்கு ஆவடி ஆணையர் எச்சரிக்கை

அம்பத்தூர், ஆக. 17-

      ஆவடி மாநகராட்சி பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடை உரிமையாளர்க ளுக்கு மாநகராட்சி ஆணையாளர் க.தர்ப்பகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

      ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சென்னை - திருப்பதி நெடுஞ்சாலை, காம ராஜர் நகர் பிரதான சாலை,  திருமுல்லை வாயல் சரஸ்வதி நகர் பிரதான சாலை, ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய 17 சாலைகளில் கால்நடைகளை திரிய விடக்கூடாது என மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

     எனவே, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கால்நடைகள் சாலைகளில் சுற்றித் திரிய கூடாது. மீறினால் பொது சுகாதார சட்டம் 1939ஆம் ஆண்டு சட்டப்படி அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் கால்நடைகளை ப்ளூ கிராஸ் சொசைட்டி ஆப் இந்தியா அல்லது இந்திய விலங்குகள் நல வாரியம் பதிவு பெற்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். மேலும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.