கள்ளக்குறிச்சி, மார்ச் 31 - விழுப்புரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து உளுந்தூர்பேட்டையில் செயல் வீரர் கூட்டம் திருச்சி மெயின் ரோடு கந்தசாமி நகரில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் உதயசூரியன் தலைமையில், வடக்கு மாவட்ட திமுக அவை தலைவர் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் முன்னிலை வகித்தார். உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் பானை சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் ரவிக்குமாரை பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார். கள்ளக்குறிச்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர்,சிபிஐ கே.ராமசாமி, மதிமுக ஜெய்சங்கர், விசிக அறிவுக்கரசு, த.வா.க ராஜேஷ் கூட்டணி கட்சி மாவட்ட செய லாளர்கள் மற்றும் முன்னணி ஊழியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.