districts

img

புதுச்சேரியில் இ பைக் வாடகை சேவைக்கு எதிர்ப்பு: ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

புதுச்சேரி, அக்.1- ஆட்டோ தொழிலாளர்க ளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இ பைக், இரு சக்கர மோட்டார் வாடகை சேவையை  தடை செய்யக்கோரி புதுச்சேரி சட்டப்பேரவை நோக்கி ஊர்வலம்-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுற்றுலா நகரமாக திகழும் புதுச்சேரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. சுற்றுலா வாசி கள் நம்பியே உள்ள ஆட்டோ தொழிலாளர்கள், தினந்தோறும் பல்வேறு சிரமங்களுக்கு உட்பட்டு இத்தொழிலைசெய்து வருகின்றனர்.இந்நிலை யில் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் இ பைக் வாடகை சேவையை புதுச் சேரியில் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக இரு சக்கர மோட்டார் வாகன வாடகை நிலையங்கள் செயல்பட்டு வருவதால், ஆட்டோ தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். எனவே இ பைக் வாடகை சேவையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  சட்டத்திற்கு  புறம்பாக இயங்கும் இரு சக்கர மோட்டார் வாக னங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இப்போராட்டம்  நடைபெற்றது. புதுச்சேரி சட்டப் பேரவை அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டி யூசி, தொமுச,ஏடியூ  உட்பட அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்கள் மணவாளன், விஜயகுமார்,  அந்தோணி தாஸ், சேகர், பாப்புசாமி, கண்ணன், அற்புத நாதன், செந்தில், மணிவண்ணன், முருகன், சங்கர், சிவக்குமார், அன்பழகன், அய்யனார் ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினார்கள். சிஐடியு மாநில தலைவர் பிரபு ராஜ், மாநில செயலாளர் சீனு வாசன், நிர்வாகிகள் ரவிச் சந்திரன் கொளஞ்சியப்பன், மதிவாணன் ஏஐடியுசி மாநில செயலாளர் சேது செல்வம் ஆகி யோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டு, ஆட்டோ தொழிலாளர் கள் காக்கி சட்டை அணிந்து இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக வேலை நிறுத்தம் செய்த ஆட்டோ தொழிலாளர்கள், மறை மலை அடிகள் சாலையில் இருந்து ஆட்டோக்களுடன் ஊர்வலமாக வந்து  கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.