வேலூர் மாநகர் கீரின் சர்க்கிள் வழியே பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி ஆட்டோ தொழிலாளர் சங்கம (சிஐடியு) சார்பில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி, ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரன், ஜிஆர்டி ஸ்டேண்ட் தலைவர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் அன்பு, ஷேர் ஆட்டோ சங்கத்த்ன் தலைவர் ரஜினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.