districts

img

ஆக. 9 பெருந்திரள் போராட்டம் புதுவையில் மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு

புதுச்சேரி,ஜூலை 19-

      ஒன்றிய  அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து வரு மான வரித்துறை  புதுச்சேரி தலைமை அலுவலகம் முன்பு சிஐடியு உள்ளிட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் பெருந்திரள் போராட்டம்  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து மத்திய  தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம்  புதுச்சேரி முதலி யார் பேட்டையில் உள்ள சிஐடியு   மாநில குழு அலுவலகத்தில் நடைபெற்றது. சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சீனு வாசன் தலைமை தாங்கினார். பிரபுராஜ், கொளஞ்சியப்பன், ஏஐடியுசி  மாநில தலை வர் தினேஷ் பொன்னையா, பொருளாளர் அந்தோணி, ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன், சொக்கலிங்கம்.  ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் மோதிலால், பொதுச் செயலாளர்  புருஷோத்தமன், எல்எல்எப் மாநில பொதுச் செயலாளர் செந்தில், எம்எல்எப் துணைத் தலைவர் மாசிலா மணி, என்டிஎல்ஏப் மாநிலத் தலைவர்  சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

   பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளாக அமல்படுத்தி வரும் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்தும்,  கார்ப்பரேட் பாஜக அரசை அகற்றுவோம்! இந்தியாவை பாதுகாப்போம், இந்திய மக்களை பாதுகாப்போம்!  என்ற முழக்கங்களை முன்வைத்து, வெள்ளையனே வெளியேறு இயக்க நாளான   ஆகஸ்ட் 9 அன்று புதுச்சேரி  வருமான வரித்துறை தலைமை அலுவலகம் முன்பு பெருந்திரள் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்தனர்.

   புதுச்சேரி மின்சார துறையில் தனி யாருக்கு தாரை வார்க்கும் முடிவை ஒன்றிய-மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். புதுச்சேரியில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் லாபகரமாக இயக்கிடவும்,  பல ஆண்டுகளாக, பல மாதங்களாக ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.