சென்னை, பிப். 11- தமிழ்நாட்டுக்கு அரசு திருப்பித் தரும் வரிப்பகிர்வு குறித்து நூதன முறையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. மத்தியில் ஒன்றிய ஆளும் பாஜக அரசு திட்டமிட்டு தென் மாநிலங்களை புறக்கணிப்பதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதிக வரி செலுத்தும் மாநிலங்களான தென் மாநிலங்களுக்கு, வட மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் ஒன்றிய அரசு குறைந்த அளவே வரிப் பகிர்வு அளிப்பதாக எழும் குற்றச்சாட்டே இதற்கு முக்கிய காரணம். இந்நிலையில் தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டு சென்னை திரு வள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்டு தென்மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கக் கோரி ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தி ருந்தது. இதையடுத்து ஒன்றிய அரசின் குழுவும் வெள்ள பாதிப்புகளை நேரில் வந்து ஆய்வு செய்தனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய திமுக நாடாளுமன்ற கட்சித்தலை வர் டி.ஆர்.பாலு, “வெள்ள நிவாரண பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு சார்பில் 37 ஆயிரம் கோடி ரூபாய் கேட்கப்பட்டது. ஆனால் ஒரு பைசா கூட வழங்கவில்லை. ஒன்றிய அரசு ஓரவஞ்சணை மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது” என பேசினார். மேலும், நிவாரணம் வழங்காத ஒன்றிய அரசைக் கண்டித்து பிப்ரவரி 8ஆம் தேதி எம்பிக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.