வந்தவாசி, ஆக.21-
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த வந்தவாசிப் போர் 1760 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி நகரில் இருக்கும் வந்தவாசி கோட்டையை கைப்பற்ற நடந்த போராகும். இந்தப் போரில் ஆங்கிலத் தளபதி அயர் கூட் தலைமையிலான படை பிரெஞ்சு தளபதி தாமஸ் ஆர்தர் லாலி தலைமையிலான படையை தோற்கடித்தது.
இந்தியாவில் வந்தவாசியில் நடைபெற்ற போரில் பிரெஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியடைந்தது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கோட்டை மற்றும் கோட்டை அகழி குதிரை லாயம் மற்றும் போரில் பயன்படுத்திய பீரங்கிகளையும், வரலாற்று சிறப்புமிக்க இடத்தையும், போரில் பயன்படுத்தப்பட்ட வேலூர் சரக டிஐ.ஜி முத்துசாமி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பார்வையிட்டனர்.