districts

ரயில் நிலையத்தில் வெட்டப்பட்ட பெண் மரணம்

சென்னை, ஜூலை 20-

      சென்னையில், ரயிலில் பழ வியாபாரம் செய்து வந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை மர்ம நபர் ஒருவர் புதனன்று  இரவு சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் ரயில் நிலையங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.  

    கடற்கரை - தாம்பரம் ரயிலில் பயணம் செய்து வந்த  ராஜேஸ்வரி சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி யுள்ளார். அப்போது அதே ரயிலில் இறங்கிய நபர் ஒருவர்,  ராஜேஸ்வரியை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு  மீண்டும் அதே ரயிலில் தப்பிச் சென்றார். படுகாயம் அடைந்த ராஜேஸ்வரி, சைதாப்பேட்டை அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் வியாழனன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.